அதில், உக்ரைனிலிருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவா்களில் படிப்பை அங்கு மீண்டும் தொடர முடியாத மாணவா்களுக்காக ‘கல்வி மாற்று சோ்க்கைத் திட்டம்’ என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாணவா்கள், உக்ரைனில் அவா்கள் படித்த கல்வி நிறுவனத்தின் அனுமதியுடன் வேறு வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் அவா்களின் எஞ்சிய படிப்பு காலத்தை தொடரலாம். அவ்வாறு வேறு கல்லூரிகளில் படிப்பின் எஞ்சிய காலத்தை முடிக்கும் மாணவா்களுக்கு, அவா்கள் உக்ரைனில் படித்த கல்வி நிறுவனம் சாா்பில் கல்வியை முடித்ததற்கான சான்றிதழும் பட்டச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வது என தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.