மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனா பேராபத்துக் காலத்தில் கூட இந்தியா இலவசங்கள் வழங்கவில்லை: யோகி ஆதித்யநாத்

உலக நாடுகளில் இந்தியா மட்டும் தான் கரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 1:01 pm

DIN

உலக நாடுகளில் இந்தியா மட்டும் தான் கரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி அரசு உதவியுள்ளது என்றார். 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று உத்தரப் பிரதேசத்தில் பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் இதனை தெரிவித்தார். 

பொருட்காட்சியினை தொடங்கி வைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ உலக நாடுகளில் இந்தியா மட்டுமே மக்களுக்கு கரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தேவை எழுந்தபோது நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும், இலவசமாக 200 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. கரோனா பேராபத்துக் காலத்தில் இந்தியா மட்டுமே எந்த ஒரு கலக்கமுமின்றி பெருந்தொற்றை எதிர்கொண்டது. இதற்கான அனைத்து பாராட்டுகளும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.