நாட்டில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 35 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
நாட்டில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 35 பேர் பலி
Published on
Updated on
1 min read


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,618 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,922 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,57,929 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,337 ஆக உள்ளது. 

நாட்டில் இதுவரை 2,16,56,54,766 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 14,84,216 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com