முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் சேருவதற்கு முன்னதாக அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவை திங்கள்கிழமை சந்தித்தார்.
50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த 80 வயதான அமரீந்தர் சிங் கடந்தாண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
சுக்தேவ் சிங் திண்ட்சா தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (சன்யுக்) ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், அதன் வேட்பாளர்கள் எவரும் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை, சிங் பாட்டியாலாவில் தோல்வியடைந்தார்.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் அறிவித்தார்.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பிய பஞ்சாப் முன்னாள் முதல்வர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
தவெக வாக்காளர்கள் ஏமாற்றம்! அந்த ஒற்றை வார்த்தையை சொல்லாத விஜய்
இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுப்போம்: திருமாவளவன்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


