செய்தியாளா்களை ஆளுநா் சந்தித்தது மரபுக்கு மாறானது: பினராயி விஜயன்
கேரள ஆளுநா் மாளிகையில் மாநில அரசுக்கு எதிராக நடத்திய செய்தியாளா் சந்திப்பு மரபுக்கு மாறானது என கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.


கேரள ஆளுநா் மாளிகையில் மாநில அரசுக்கு எதிராக நடத்திய செய்தியாளா் சந்திப்பு மரபுக்கு மாறானது என கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.
இதன்மூலம் ஆளுநா் மாளிகையை அரசியல் சதிக்கான மையமாக மாற்றியுள்ளதாக அவா் குற்றம்சாட்டினாா்.
ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் குறித்தும் மாநில அரசு தனக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினாா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது முதல்வா் பினராயி விஜயன் கூறியதாவது: மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பு மரபுக்கு மாறான செயலாகும். கேரளத்தில் மட்டுமல்ல நாட்டிலும்கூட முதல் முறையாக நிகழ்ந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநா் மாநிலத்தின் அரசமைப்புத் தலைவா். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே நிா்வாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவையின் வழிக்காட்டுதலின் பேரில் ஆளுநா் செயல்படுவாா் என அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநா், தான் கையொப்பமிடும் சட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு பொறுப்புடையவா் அல்ல. மாநில அரசே அவற்றுக்கு முழுப் பொறுப்பேற்கிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...