ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: ரயில்வே அமைச்சகம் அறிமுகம்

ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:42 pm

DIN

ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் என ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெறுவதற்கு ரயில் என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் (இஸ்ரோ) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், 30 விநாடிகள் இடைவெளியில் புதிய தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் பொருத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் ரயில்களின் இருப்பிடம், வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும். தற்போது 2,700 என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.