நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்து: தொலைக்காட்சி நெறியாளருக்கு எதிரான புகாா்கள் தில்லி போலீஸுக்கு மாற்றம்
நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்து விவகாரத்தில் தனியாா் தொலைக்காட்சி நெறியாளா் நாவிகா குமாருக்கு எதிராக பதிவான அனைத்து புகாா்களும் தில்லி போலீஸுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.







