தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

குஜராத்தில் ஆட்டோ உதிரிபாகங்கள் கிடங்கில் பயங்கர தீ

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :24 செப்டம்பர் 2022, 10:34 am IST

வதோதரா (குஜராத்): குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 11 தீயணைப்பு வாகனங்களூடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

குஜராத் மாநிலம், வதோரா மாவட்டத்தில் "ஹாலோல் சாலைக்கு அருகில் உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  

இதுகுறித்து தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு 56க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயைகட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தீ விபத்தில் கிடங்கில் உள்ள டயர்கள் மற்றும் எண்ணெய் போன்ற இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் அதிகயளவில் எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 

இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பார்த் பிரம்பட் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.