மறைந்த முன்னாள் துணை பிரதமா் தேவி லாலின் பிறந்த தினத்தையொட்டி, இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சி சாா்பில் ஹரியாணாவில் ஃபதேஹாபாதில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஐஎன்எல்டி தலைவா் ஓம் பிரகாஷ் செளதாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிரோமணி அகாலி தளத்தின் சுக்பீா் சிங் பாதல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒரே மேடையில் பங்கேற்றனா். ஆனால், காங்கிரஸைச் சோ்ந்த யாரும் பங்கேற்கவில்லை.