அசோக் கெலாட்டுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசியுள்ளார். 
அசோக் கெலாட்டுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசியுள்ளார். 

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளது கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பொதுச் செயலாளர் அஜய் மேகனும் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று பிற்பகல் ஜெய்ப்பூரில் உள்ள மரியாட் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com