ராஜஸ்தான் நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளது கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். அஜய் மேகனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும் கேரளத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் தன்னுடன் இருந்த கே.சி.வேணுகோபாலை தில்லிக்கு அனுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் அஜய் மேகன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க | அசோக் கெலாட்டுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு