/

நேரலையில் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை இன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 6:24 am

DIN

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை இன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில், முதற்கட்டமாக சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்றுமுதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, தில்லி அரசு - மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரம், மகாராஷ்டிர அரசியல் தொடர்பான வழக்குகளும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.