சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது, பதற்றத்தில் பாஜக: ஜெய்ராம் ரமேஷ்

 பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பதற்றமடையச் செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 1:34 pm

DIN

பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பதற்றமடையச் செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் புதிய ராகுல் காந்தி மற்றும் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. பின்னர் கேரளத்தில் தொடர்ந்த இந்த பயணம் தமிழகத்தின் கூடலூர் வழியாக கர்நாடகத்திற்கு இன்று (செப்டம்பர் 30) வந்தடைந்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: “  காங்கிரஸ் பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் யார் இந்த பாரதத்தை உடைத்தார்கள் தற்போது இணைப்பதற்கு எனக் கேட்டால் எங்களது பதில், மோடியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்பதாகவே இருக்கும். ஏனெனில், நாட்டில் பொருளாதார சமத்துவம் இல்லாத சூழல் அதிகரித்துள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசிடமே குவிந்து வருகிறது. மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பின்றி போகிறது. அதனால் தான் பாரதத்தை இணைக்கும் இந்த ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த யாத்திரை காங்கிரஸுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் போன்றது. காங்கிரஸின் பலம் அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக பதற்றமடைந்துள்ளது. இந்த ஒற்றுமை நடைப்பயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த ஒற்றுமை யாத்திரையின் மூலம் புதிய ராகுல் காந்தி மற்றும் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.