இந்தியாவில் 715 நாள்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 913 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 715 நாள்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 913 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 715 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,29,044ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 12597 ஆக உள்ளது.  இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 13 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,358 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,316 போ் குணமடைந்துள்ளனா்.

இதுவரை 4,24,95,089 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 2,84,073 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 184 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,14,823 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 79.10 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com