ஏ.சி. வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மரியம்மனஹள்ளி கிராமத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி சந்திரகலா)(38), மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 

நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஏ.சி. வெடித்து, வீடு முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதில் நால்வருமே உயிரிழந்தனர். 

ஏ.சி.யில் இருந்து வாயு கசிந்து, பின்னர் மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

எனினும், கடன் தொல்லை அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com