மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அசாமிலிருந்து துபைக்கு பறக்கும் பலாப்பழம், பச்சைமிளகாய்

அசாமில் விளைவிக்கப்படும் பலாப்பழம் மற்றும் பச்சைமிளகாய் துபை நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

News image

அசாமிலிருந்து துபைக்கு பறக்கும் பலாப்பழம், பச்சைமிளகாய்

Updated On :9 ஏப்ரல் 2022, 12:04 pm

PTI


துப்ரி: அசாமில் விளைவிக்கப்படும் பலாப்பழம் மற்றும் பலாப்பழம் துபை நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, லோகப்ரியா விமான நிலையத்துக்கு, புறப்பட்ட சரக்குப் பெட்டகங்களை துப்ரி துணை ஆணையர் அன்பமுதன் எம்.பி. கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

அசாமிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து துபைக்கு நேரடியாக விமானம் மூலம் பலாப்பழம் மற்றும் பச்சை மிளகாய் அனுப்பி  வைக்கப்பட உள்ளது.

இந்த சரக்குப் பெட்டகங்களில் 1.5 டன் அளவுக்கு பலாக்காயும் 0.5 டன் பச்சை மிளகாயும் வைக்கப்பட்டுள்ளது. லுலு குழு சர்வதேச நிறுவனம் மூலம் அரபு நாடுகளில் இருக்கும் பலசரக்கு கடைகளில் இந்தப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கின்றன. 

இந்த நடவடிக்கை முழுவதும் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன், தொழில்நுட்ப ஆதரவு பெற்று நடைபெற்றிருப்பதாக அன்பமுதன் தெரிவித்துள்ளார.

துப்ரி மாவட்டத்துக்கு மட்டுமின்றி, இந்த விவசாய - பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கை தொடங்கிய இந்நாள், ஒட்டுமொத்த அசாம் மாநிலத்துக்கும் சிறப்பு வாய்ந்த நாளாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.