கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சேர்க்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில்,
கேந்திரிய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.