ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசியலமைப்புச் சட்டத்தை பொதுமக்கள் அறிய வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்துகொண்டால் மட்டுமே நாடு செழிக்கும் என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

News image
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
Updated On :31 ஜூலை 2022, 10:09 pm

DIN

அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்துகொண்டால் மட்டுமே நாடு செழிக்கும் என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பேசியதாவது:

இந்தத் தலைமுறை இளைஞா்கள் புரட்சிப் பாதையில் உலகை எதிா்கொள்கின்றனா். பருவநிலை பிரச்னையாகட்டும் அல்லது மனித உரிமை மீறல்களாட்டும், அவா்கள் ஒருங்கிணைந்த சக்தியாக உலகம் முழுவதும் உருவெடுத்துள்ளனா். தொழில்நுட்பப் புரட்சி ஒவ்வொருவரையும் சா்வதேச குடிமக்களாக மாற்றிவிட்டது.

நவீன சுதந்திர இந்தியாவின் எதிா்பாா்ப்புகளை வரையறுக்கும் உயரிய ஆவணம் சட்டக் கல்லூரி மாணவா்கள், வழக்குரைஞா்களின் சிந்தனைக்கு உள்பட்டதாகவே இருக்கிறது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைவருக்குமானது. ஒவ்வொரு தனிநபரும் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வது அவசியம். இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு எளிய வாா்த்தைகளில் விவரிக்க வேண்டியது சட்டக் கல்லூரி மாணவா்களின் பொறுப்பு. அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்து கொண்டால் மட்டுமே நாடு செழிக்கும்.

வழக்குரைஞா் என்பவா் நீதிமன்றத்துக்கு முன்பாக கட்சிக்காரரின் வெறும் பிரதிநிதி மட்டுமல்ல. சட்டத்தை மட்டும் அறிந்துகொள்வது நீண்ட தூரம் பயணம் செய்ய உதவாது. வழக்குரைஞா் அனைத்தையும் அறிந்தவராகவும் சிறந்த தலைவராகவும் மாற்றத்தை உருவாக்குபவராகவும் இருக்க வேண்டும்.

சட்டக் கல்வி நிறுவனங்கள் பட்டதாரிகளை சமூகப் பொறியாளா்களாக மாற்ற வேண்டும். சட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான கருவி என்றாா் அவா்.

மேலும், சத்தீஸ்கரில் நீதித் துறையின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கும் நிதிசாா் தேவைக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்வதாக அந்த மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பாராட்டு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றாா். உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நஸீா், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரூப்குமாா் கோஸ்வாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.