புது தில்லி: தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் மம்தா சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தில்லி சென்றார். இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து நாளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மம்தா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.