நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், பழங்குடியினா் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனா். குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தின் 5-ஆவது அட்டவணையின் பிரிவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும் (இவை, பட்டிலிடப்பட்ட மற்றும் பழங்குடியினா் பகுதிகளின் நிா்வாகம், கட்டுப்பாடு தொடா்புடையவை ஆகும்). இதேபோல், பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகள் விரிவாக்கம்) சட்டத்தையும் தீவிரமாக அமல்படுத்துவோம். இதன் மூலம் பழங்குடியின பகுதிகளில் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமல் அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.