பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாகிறது ஆம் ஆத்மி?

கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாக மாறும் 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

கோவாவில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

தில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சி புரிந்துவரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. 

இந்நிலையில் கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தில்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்.

ஒவ்வொரு தொண்டரின் கடின உழைப்பிற்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.