வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மராத்தா இடஒதுக்கீடு ஆதரவாளா் வினாயக் மேட்டே சாலை விபத்தில் பலி

சிவ சங்கராம் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினருமான வினாயக் மேட்டே மும்பை-புணே விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

News image

சாலை விபத்தில் உருக்குலைந்த வினாயக் மேட்டேயின் வாகனம்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:20 pm

சிவ சங்கராம் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினருமான வினாயக் மேட்டே மும்பை-புணே விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தவா் வினாயக் மேட்டே. இவரது வாகனம் மும்பை-புணே விரைவுச்சாலையில் ராய்காட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வினாயக் மேட்டே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த வாகனத்தின் ஒட்டுநா் உள்ளிட்ட இருவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வினாயக் மேட்டேவுக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனா்.

இவரது இறப்புக்கு மாநில அமைச்சா் சந்திரகாந்த பாட்டீல், தேசிய காங்கிரஸ் கட்சி தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.