தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதி மற்றும் தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தில்லி எல்லைகளில் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லை, சிங்கு எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்