பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'தெலங்கானாவின் பெருமை' இணையத்தில் டிரெண்டிங்: காரணம் என்ன?

தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

Published On :


தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

செகந்தராபாத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் செருப்பை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கையில் எடுத்துப் போட்டார். இது தொடர்பான விடியோவை, தெலங்கானாவின் பெருமை எனக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றன.

Story image

இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் பெருமை என்ற ஹேஷ்டேக்கில் பொதுமக்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள உஜ்ஜயினி கோயிலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். 

சாமி தரிசனம் செய்து வெளியே வந்தபோது, அமித் ஷாவை முந்திக்கொண்டு சென்ற சஞ்சய் குமார், அமித் ஷாவின் செருப்புகளை கையில் எடுத்துப்போட்டார். 

இதனை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் கே.டி.ராமா ராவ் தெலங்கானாவின் பெருமை என ஹேஷ்டேக்கிட்டு சுட்டுரையில் பகிர்ந்தார். தெலங்கானாவின் சுயமரியாதையை அவர் இழிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டுரையில் விமர்சித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என ஹேஷ்டேக்கிட்டு பொதுமக்கள் பலரும் இந்த விடியோ குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.