திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ரிலையன்ஸ்: தலைமை பொறுப்பேற்கிறார் முகேஷ் அம்பானி மகள்

ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவிற்குத் தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்கவுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 

News image
முகேஷ் அம்பானி / ஈஷா அம்பானி
Updated On :29 ஆகஸ்ட் 2022, 12:51 pm

DIN

ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவிற்குத் தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்கவுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 

ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், வரும் தீபாவளி பண்டிகை முதல் இந்தியாவின் 4 நகரங்களில் 5ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதனை ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி அறிவித்தார். 

இதேபோன்று அவர் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார். ரிலையன்ஸ் சில்லறை வணிகப் பிரிவை (Reliance retail unit) தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிவித்தார். 

ஏற்கெனவே ஜியோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய முகேஷ் அம்பானி, அதனை தனது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியிடம் கட்நத ஜூன் மாதம் ஒப்படைத்தார். 

அதனைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் சில்லறை வணிகப் பிரிவை தனது மகள் ஈஷா அம்பானியிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து பேசிய முகேஷ் அம்பானி, இளைய தலைமுறையினரிடம் வர்த்தகத்தை ஒப்படைப்பது ஆரோக்கியமான செயல் எனக் குறிப்பிட்டார். மேலும், அடுத்த தலைமுறையை சேர்ந்த தலைவர்கள் நிர்வாகத்தை துடிப்புடனும், நம்பிக்கையுடனும் நிர்வாகத்தை நடத்துவார்கள். 

ஆரம்ப கட்டம் முதலே ஆகாஷும், ஈஷாவும் மிகுந்த உத்வேகத்துடன் வணிகத்தில் கவனம் செலுத்தி வந்தவர்கள். இளைய மகன் ஆனந்த் அம்பானியும் அதிக அளவிலான நேரத்தை ஜாம்நகர் ஆலையிலேயே  செலவிடுகிறார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.