திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தீபாவளி முதல் 5ஜி சேவை! முகேஷ் அம்பானி அறிவிப்பு

நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
தீபாவளி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை!
Updated On :29 ஆகஸ்ட் 2022, 1:01 pm

DIN


நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இது தொடர்பாக பேசிய முகேஷ் அம்பானி, தீபாவளி பண்டிகை முதல் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 4 நகரங்களில் வழங்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை அதிவேக இணைய பயன்பாட்டின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.