சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிறுநீரைக் குடிக்கவைத்த பாஜக தலைவர்: 12 நாள்கள் போலீஸ் காவல்

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image

சீமா பத்ரா - கைது செய்து அழைத்துச்செல்லப்படும் சீமா பத்ரா

Updated On :31 ஆகஸ்ட் 2022, 4:22 pm IST

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் பாஜக தலைவருமான சீமா பத்ரா, வீட்டில் பணிபுரிந்த பெண்ணை இழிவாக நடத்தியுள்ளார். 

சீமா பத்ரா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். 29 வயதாகும் அவர், சீமா பத்ரா வீட்டை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் பணிபுரிந்து வந்த சுனிதாவை, கடுமையாக அடித்ததுடன், உடலில் காயம் ஏற்படும் அளவிற்கு தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சீமா பத்ரா வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், சீமாவை ஜார்கண்ட் மாநில காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை செப்டம்பர் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கட்சியிலிருந்து நீக்கம்:

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்ததால், சீமா பத்ராவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.