கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுநீரைக் குடிக்கவைத்த பாஜக தலைவர்: 12 நாள்கள் போலீஸ் காவல்

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image

சீமா பத்ரா - கைது செய்து அழைத்துச்செல்லப்படும் சீமா பத்ரா

Updated On :31 ஆகஸ்ட் 2022, 10:52 am

DIN

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் பாஜக தலைவருமான சீமா பத்ரா, வீட்டில் பணிபுரிந்த பெண்ணை இழிவாக நடத்தியுள்ளார். 

சீமா பத்ரா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். 29 வயதாகும் அவர், சீமா பத்ரா வீட்டை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் பணிபுரிந்து வந்த சுனிதாவை, கடுமையாக அடித்ததுடன், உடலில் காயம் ஏற்படும் அளவிற்கு தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சீமா பத்ரா வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், சீமாவை ஜார்கண்ட் மாநில காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை செப்டம்பர் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கட்சியிலிருந்து நீக்கம்:

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்ததால், சீமா பத்ராவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.