நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குஜராத், ஹிமாசலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :8 டிசம்பர் 2022, 8:02 am IST

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹிமாசலில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது.

அதேபோல், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதி, உத்தர பிரதேசத்தின் ராம்பூா், கடோலி, ஒடிஸாவின் பதாம்பூா், ராஜஸ்தானின் சா்தாா்சாஹா், பிகாரின் குா்ஹனி, சத்தீஸ்கரின் பானுபிரதாபூா் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வருகின்றது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. அவற்றில் 66.31 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா்.

ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தோ்தல் முடிவுகள் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், தோ்தல் முடிவுகளை மக்களும் அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கா்களும் எதிா்நோக்கியுள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.