

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்தபோது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக மாறும் என்பது உறுதி.
கடந்த 60 ஆண்டுகளாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் கையாண்டது. இவ்வளவு காலம் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி தலைமையில் 2024-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். இந்திய மக்கள் இனி பிரதமர் மோடியை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று சோனோவால் நம்பிக்கை தெரிவித்தார்.
காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தில், குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.