எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பாஜக நாடு முழுவதும் போராட்டம்: பிலாவல் புட்டோ உருவ பொம்மை எரிப்பு

 பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாகரீகமற்ற முறையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை கண்டித்தும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டம்.

News image
Updated On :17 டிசம்பர் 2022, 2:49 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாகரீகமற்ற முறையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை கண்டித்தும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை குஜராத்தில் பலரை கொன்று குவித்த கொலையாளி என நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த முறையற்ற பேச்சுக்கு அமைச்சர்களும், பாஜகவைச் சேர்ந்த பலரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்தினை கண்டிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டும் விதமாகவும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரை நோக்கிப் பேரணியாக செல்வதை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை வெறுப்பு அமைச்சர் எனக் கூறியும், அவரது உருவ பொம்மையும் எரித்தும் வருகின்றனர். பிலாவல் புட்டோ இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களிடமும் அவரது இந்தத் தரக்குறைவான செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பிரதமருக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதையடுத்து பிலாவல் புட்டோ பிரதமர் நரேந்திர மோடி குறித்து இத்தகைய நாகரீகமற்ற கருத்தினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.