நடிகை துனிஷா தற்கொலை: முன்னாள் காதலனுக்கு காவல் நீட்டிப்பு!

நடிகை துனிஷா வழக்கில் முன்னாள் காதலன் ஷீசன் கானுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை காவல் நீட்டித்து வசாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை துனிஷா தற்கொலை: முன்னாள் காதலனுக்கு காவல் நீட்டிப்பு!

நடிகை துனிஷா வழக்கில் முன்னாள் காதலன் ஷீசன் கானுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை காவல் நீட்டித்து வசாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய் நீதிமன்றத்தில் ஷீசன் கானை காவல் துறையினர் இன்று (டிச.28) ஆஜர்படுத்தினர்.

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். ‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

அந்தவகையில் ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு மத்தியில் கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

துனிஷாவின் தாயார், தந்து மகளின் மறைவுக்கு காதலனும் சக நடிகருமான ஷீசன் காரணம் என காவல் துறையில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஷீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் தங்கள் இருவருக்கும் இடையில் காதல் இருந்ததாகவும், ஆனால் காதலை முறித்துக்கொள்ளலாம் என நான் விலகியதால், துனிஷா மனமுடைந்து காணப்பட்டதாகவும் ஷீசன் வாக்குமூலம் அளித்தார். 

காதல் முறிவுக்குப் பிறகு துனிஷா தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அப்போது தான் காப்பாற்றி விட்டதாகவும் காவல் துறையின் விசாரணையில் குறிப்பிட்டார். 

இநிலையில் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு வசாய் நீதிமன்றத்தில் ஷீசன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஷீசனை வரும் வெள்ளிக்கிழமை வரை விசாராணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

காதலன் வாக்குமூலம்

துனிஷா இறப்பதற்கு சில நாள்கள் முன்புகூட தற்கொலைக்கு முயன்றாள். ஆனால் அப்போது நான் உடன் இருந்ததால், அவளைக் காப்பாற்றினேன். துனிஷாவின் தாயாரிடமும் இது தொடர்பாக கூறி கவனித்துக்கொள்ள வேண்டினேன் என காவல் துறை வாக்குமூலத்தில் ஷீசன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

தில்லியில் காதலனால் நடந்த இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் மதமாற்றம் இருப்பதாக, பல தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதாவது முஸ்லீம் ஆண்கள் ஹிந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக சில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இதனால் மனமுடைந்த ஷீசன், துனிஷா உடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக காவல் துறை விசாரணையில் ஷீசன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com