சேலம்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
இதையும் படிக்க | தாயார் ஹீராபென் உடலுக்கு பிரதமர் மோடி இறுதிச்சடங்கு
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இருந்து கார் மூலம் கோவை கிளம்பினார்.
கோவையிலிருந்து விமான மூலம் அவர் குஜராத் செல்கிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.