புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக இன்று அதிகாலை 5.59 மணிக்கு சி-52 செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் 1,710 கிலோ எடைகொண்ட இஒஎஸ்-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.
இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்- 2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

