தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வரை விட ஐந்து மடங்கு அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் மகன்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார், 16.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களையும் 58.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும் வைத்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜனவரி 2022, 9:46 am

DIN

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை விட அவரது மகன் நிஷாந்த், ஐந்து மடங்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளார். அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என மொத்தம் 75.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நிதிஷ் குமாருக்கு சொந்தமாக உள்ளது. 

முதல்வர், அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் பிகார் அரசின் இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக 29,385 ரூபாயும் வங்கி கணக்கில் 42,763 ரூபாயும் உள்ளது. அதேபோல், அவரது மகனிடம் ரொக்கமாக 16,549 ரூபாயும் நிலையான வைப்பு கணக்கில் 1.28 கோடி ரூபாய் உள்ளது.

நிதிஷ் குமாருக்கு சொந்தமான அசையும் சொத்துக்களின் மதிப்பு 16.51 லட்சம் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, அசையா சொத்துக்களின் மதிப்பு 58.85 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அவரது மகனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.63 கோடி ரூபாயாக உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு 1.98 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிதிஷ் குமாருக்கு சொந்தமாக புது தில்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. அதேபோல், பாட்னாவில் உள்ள கல்யாண் பிகா, ஹகிகத்பூர், கன்கர்பாக் ஆகிய இடங்களில் அவரது மகனுக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் குடியிருப்பு வீடுகளும் உள்ளன. 1.45 லட்சம் மதிப்பிலான 13 பசுக்களும், ஒன்பது கன்றுகளும் தன்னிடம் இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளிலும் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை கட்டாயமாக பொதுவெளியில் வெளியிட வேண்டும் என நிதிஷ் குமார் அரசு உத்தரவிட்டிருந்தது. துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முதல்வரை விட அவரது அமைச்சரவை சகாக்கள் அதிக சொத்துகளை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.