எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தம்: மத்திய அரசு

மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2022, 1:01 pm

DIN


மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனாவின் உருமாறிய தொற்று வகையான ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து, தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.