புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மும்பை - கோவா கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா: பரிசோதனை முடிவுக்காக பயணிகள் காத்திருப்பு

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட பயணியர் கப்பலில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுடன் பயணம் செய்த கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2022, 8:46 am

DIN


மும்பை:  மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட பயணியர் கப்பலில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுடன் பயணம் செய்த கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட கப்பலில் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கப்பலிலேயே பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 1471 பயணிகள் மற்றும் 595 பணியாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனையின் முடிவுகளுக்காக அனைவரும் கப்பலிலேயே காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பல் தற்போது மோர்முகாவ் துறைமுக கப்பல் முனையமான வாஸ்கோ அருகே நிறுத்தப்பட்டுள்ளது. 

யாரும் கப்பல் தளத்தில் ஏறவோ, இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.