நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 442 பேர் உயிரிழந்தனர்.
நேற்று 1.68 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 15.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து 60,405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,55,319 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிக்கப்படும் விகிதம் 11.05 சதவிகிதமாக உள்ளது.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரமும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானும் ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.