பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா: அபாயத்தை எட்டுகிறதா?

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

Published On :


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் 6.15 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3.58 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி போடும் பணிகளை ஊக்குவித்து வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான மக்கள் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 4.26 கோடி மக்கள் குணமடைந்தனர். அதேபோன்று இந்தியாவில் 3.46 கோடி மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் 863,896 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 484,359 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 1.9 கோடி மக்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 9.6 லட்சம் மக்கள் கரோனாவுக்கு வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.