உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் நடக்கவுள்ள தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.