அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அசாமின் கரிம்காஞ் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்பிலான 26,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.