2047-ஆம் ஆண்டு நாட்டின் 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்குள், புதிய இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி தில்லியிலுள்ள இந்தியா கேட் பகுதியில் அவருக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
பின்னர், பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்களுக்கு 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விருதை பிரதமர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு தேசிய பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மீட்புப் படை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையின் பணிகளை சர்வதேச அமைப்புகள் பாராட்டி வருகின்றன.
பேரிடர் மீட்புப் படையினருக்கு வானியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் உள்பட மற்ற பயிற்சிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேசிய அவர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியர்களிடையே விடுதலைக்கான தன்னம்பிக்கையை வளர்த்தவர். மக்களிடையே எழுச்சியையூட்டி நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

