தில்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி தில்லி கேட் பகுதியில் அவருக்கு லேசர் சிலை திறக்கப்பட்டது.
நேதாஜிக்கு கிராணைட் கற்களால் சிலை அமைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கிராணைட் சிலை அமைக்கும் வரை முப்பரிமாண ஒளி வடிவ சிலை இந்தியா கேட் பகுதியில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.