புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக, தத்தமது சிறைகளில் வாடும் சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்திருக்கும் சிறைக்கைதிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பாகிஸ்தான் அளித்திருக்கும் பட்டியலில், இந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்று கருதும் 49 பொதுமக்களும், 633 மீனவர்களும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?
இருநாட்டு தூதரகங்களுக்கு இடையே 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில், இரு நாடுகளும், தங்களது சிறைகளிலிருக்கும் அண்டை நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இதற்கிடையே, பாகிஸ்தான் சிறையிலிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்து உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்திய மீனவர்கள் 536 பேர் மற்றும் பொதுமக்கள் 3 பேரை, முன்கூட்டியே விடுதலை செய்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


