கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் மணிக்குட்டன், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது அத்தை ஆகியோர் இறந்து கிடந்தனர்.
மணிக்குட்டன் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மற்ற நால்வரும் விஷம் குடித்துள்ளனர்.
கடன் தொல்லையால் மணிக்கூட்டன் மன உளைச்சலில் இருந்ததாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: அரசு வேலை வேண்டுமா..? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அவர் தனது வீட்டிற்கு அருகில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் சமீபத்தில் சொந்த வீடு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவகத்தை ஆய்வுசெய்து மணிக்கூட்டனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதைத் தொடர்ந்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சனிக்கிழமை தனது உணவகத்தைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணிக்குட்டன் செய்த நிலையில், இன்று காலை தனது வீட்டிற்கு வந்த உணவக ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைக் கண்டு அதிர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் 5 பேரின் சடலங்களையும் மீட்டு, மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.