கர்நாடகத்தில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 
கர்நாடகத்தில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 

கானாபூர் தாலுகாவில் உள்ள சுஞ்சவாட் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு வீட்டின் களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தான். 

கனமழை காரணமாக பெலகாவி நகரம், பெலகாவி தாலுகா மற்றும் கானாபூர் தாலுகாவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், பல ஆறுகள், சிற்றாறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் பாலங்கள் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வெள்ளம் பாதித்த மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை பிற்பகல் காணொலி காட்சி மூலம் நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com