முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. முதல் நாள் கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக தேர்தெடுக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
அதேபோல், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோரும் இன்று பதவியேற்றனர்.