கோமியம் லிட்டருக்கு 4 ரூபாய்!

பசு நீதி திட்டத்தின் மூலம் கோமியம் லிட்டருக்கு 4 ரூபாய் என விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பசு நீதி திட்டத்தின் மூலம் கோமியம் லிட்டருக்கு 4 ரூபாய் என விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
சத்தீஸ்கர் முதலமைச்சர் அலுவலகம் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கோமியத்தின் மூலம் வருவாய் ஈட்டு முன்னெடுப்பு  சத்தீஸ்கர் ஹரேலியில் ஜூலை 28ஆம் தேதி அரசாங்கம் பசு நீதி திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்போரிடமிருந்து மாட்டின் கோமியத்தை லிட்டருக்கு 4ரூபாய் என அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.

கால்நடை வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ், கால்நடை விவசாயிகள், கிராம மக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு ரூபாய் 294 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com