பாலாசோர்: தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர், குடியரசுத் தலைவராக பதவியேற்றிருப்பதை ஒடிசா கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பென்சில் வாங்கச் சென்ற 14 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அப்பெண் தடுத்ததால், ஆத்திரத்தில், 28 வயது நபர், சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
பாலாசோர் மாவட்டத்தில், 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி, தயாநிதி ஜேனா என்பவரின் மனைவியிடம் கல்வி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிறன்று காலை, பென்சில் வாங்கச் சென்ற சிறுமியை தயாநிதி ஜேனா வலுக்கட்டாயமாக அருகிலிருக்கும் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தீ வைத்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார் சிறுமி. தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், பாலியல் பலாத்காரத்துக்கு மறுத்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தயாநிதியின் வீட்டுக்கு கல்வி படிக்க அந்தசிறுமி சென்று வந்துள்ளார். ஆனால், திடீரென சிறுமி அங்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.
கொலை குறித்து சிறுமியின் தாத்தா நாராயண் கூறுகையில், எங்களது பேத்தி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென பென்சில் வாங்க வேண்டும் என என்னிடம் பணம் வாங்கிக் கொண்டுச் சென்றார். அவர் இப்போது உயிரோடில்லை என்று கூறி கதறுகிறார்.
இது குறித்து ஜேனாவின் மனைவியிடம் கேட்டதற்கு, ஒரு சில மாதமாக சிறுமி தன்னிடம் கல்வி பயில வருவதில்லை என்றும், எதற்கான தனது கணவர் இந்தக் கொலையைச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!

பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்

ரூ. 251.5 கோடி இழப்பை பதிவு செய்த ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்!

மத்திய உள்துறை, அமைச்சரவைச் செயலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!
விடியோக்கள்
அறிமுகமாகும் பாலிமர் நோட்டுகள் | RBI | Sanjay Malhotra | Governor of the Reserve Bank of India



