நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலைமுதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில், ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை
மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அவையில் பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் செளத்ரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


