நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலைமுதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில், ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை
மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அவையில் பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் செளத்ரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இன்று தில்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

ரிஷப ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தையல் கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

