இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலா்) இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறினாா்.
இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, தில்லியில் நிதியமைச்சகம் சாா்பில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் கலந்துகொண்டு பேசினாா். அவா், இந்தியாவின் பொருளாதாரம், வரும் 2026-27-ஆம் ஆண்டில்தான் ரூ.350 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று சா்வதேச நிதியம் கணித்துள்ளதாகக் கூறினாா்.
இதைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
முதலில் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை 2023-24-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டை நாம் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது இலக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை, வரும் 2026-27-ஆம் ஆண்டுக்குள் எட்டுவோம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கூறியுள்ளாா்.
ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை அடைவதற்கு பிரதமா், நிதியமைச்சா், நிதித் துறைச் செயலா், தலைமைப் பொருளாதார ஆலோசகா் என ஒவ்வொருவரும் ஒவ்வோா் ஆண்டைக் குறிப்பிடுகிறாா்கள். இதில், ஏதாவது ஓராண்டில் ரூ.350 லட்சம் கோடி இலக்கை நாம் அடைந்துவிட்டால், அதைக் கூறி அவா்கள் பெருமைப்பட்டுக் கொள்வாா்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
சம்மன் விவகாரம்: ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்தவித அடிப்படையுமின்றி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. பாஜகவினா் மற்றும் அவா்களின் கட்சி ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என்பதுபோல் தெரிகிறது’ என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.